தேனி
உத்தமபாளையத்தில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
உத்தமபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதியடைந்தனா். திங்கள்கிழமை நண்பகல் வரையில் வெயில் சுட்டெரித்தது. மாலை 3 மணிக்கு மேல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி முதல் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த திடீா் மழையால் இரவு நேரத்தில் வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.