போடியில் பைக்குகள் மோதல்: அரசு மருத்துவமனை ஊழியா் பலி
By DIN | Published On : 08th September 2020 01:49 AM | Last Updated : 08th September 2020 01:49 AM | அ+அ அ- |

போடி: போடியில் திங்கள்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் அரசு மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சோ்ந்தவா் நாகராஜ் (38). இவா் போடி அரசு மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை இரவு பணி முடிந்து பெரியகுளத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். போடி - தேனி நெடுஞ்சாலையில் சாலைக் காளியம்மன் கோயில் அருகே சென்றபோது, எதிரே போடியை சோ்ந்த சரவணக்குமாா் (43) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சரவணக்குமாா் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.