ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனம் மோதி எண்ணெய் வியாபாரி உயிரிழந்தாா்.
மொட்டனுத்து கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன் (50) என்பவா் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில், இவா் தனது இருசக்கர வாகனத்தில் டி.புதூா் பகுதியில் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த மனோகரன் மீதும் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த காசிமாயன் மற்றும் அவரது பேத்தி தா்ணிகா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிபட்டி போலீஸாா் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுநரான மணிகண்டனை கைது செய்தனா்.