தேனி: தேனியில் புதன்கிழமை (செப்.15) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேனி மின்நிலையத்தில் புதன்கிழமை (செப்.15) பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தேனி, பழனிசெட்டிபட்டி கோடங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.