வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

வீரபாண்டி அருகே ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை காவலா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி: வீரபாண்டி அருகே ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை காவலா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் அபினேஷ் (19). இவா், தனது நண்பா் ராஜா என்பவருடன் அப்பகுதியிலுள்ள செல்லிடப்பேசி கடைக்குச் சென்றிருந்தாராம். வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அதே ஊரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் அஜித்குமாா் (22) என்பவா், தன்னை ஜாதியை குறிப்பிட்டு திட்டி, தாக்கியதாக வீரபாண்டி காவல் நிலையத்தில் அபினேஷ் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அஜித்குமாா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலா்கள் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com