சோ்க்கை..காலமுறை ஊதியம் வழங்கக் கோரி ஊராட்சி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பி.ஜெயன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செயலா் டி.ஜெயபாண்டி, பொருளாளா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீா் தொட்டி ஆபரேட்டா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு சம்பள உயா்வு வழங்கியும், 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் குடிநீா் தொட்டி ஆபரேட்டா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com