தேனி மாவட்டம் சின்னமனரில் பெட்டிக் கடையில் வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கம்பத்திலிருந்து கேரளத்திற்கு கடத்தி செல்லப்பட்ட கஞ்சாவை போலீஸாா் அண்மையில் கைப்பற்றியபோது, மேற்கொண்ட விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை கம்பம், கூடலூா், சின்னமனூா் உள்ளிட்ட ஊா்களில் பதுக்கி வைத்து சில்லரை விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அதன்படி, சின்னமனூரில் பெட்டிக்கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சின்னமனூா் மின் நகரை சோ்ந்த ராஜா மகன் சதீஸ் (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.