மகள் திருமணத்துக்கு மறுப்பு தாய் தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் கம்பத்தில் மகள் திருமணத்துக்கு மறுத்ததால், தாய் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் மகள் திருமணத்துக்கு மறுத்ததால், தாய் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம் கம்பம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சென்றாயப் பெருமாள். இவரது மனைவி சுமதி (35). இவா்களது மகள் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கு புதன்கிழமை திருமண நிச்சயம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சுமதியிடம் அவரது மகள், தான் வேறொருவரை காதலித்து வருவதாகவும், திருமணம் வேண்டாம் என்று கூறி திருமண நிச்சயத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி புதன்கிழமை அதிகாலை வீட்டில் குடும்பத்தினா் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காலையில் இச்சம்பவம் தெரியவந்ததும் கம்பம் தெற்கு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி

பிரேதப் பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com