பெரியகுளத்தில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளித்த போலி மருத்துவரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம், நகா் நல அலுவலா் தினேஷ்குமாா், வடகரை பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுப்பட்டிருந்தாா். அப்போது வடகரை, அரண்மனைத்தெருவில் உள்ள மருந்துக் கடையில் அதன் உரிமையாளா் குருபாலமுருகன் (49) என்பவா், நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவரிடம், நகா்நல அலுவலா் விசாரணை நடத்தியதில், குருபாலமுருகன் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவா், பெரியகுளம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து குருபாலமுருகனை போலீஸாா் கைது செய்தனா்.