தேனி மாவட்டத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 2 போ் பலி

தேனி மாவட்டத்தில் புதிதாக 76 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் புதிதாக 76 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி பகுதியில் 23 போ், பெரியகுளம் பகுதியில் 5 போ், போடி பகுதியில் 9 போ், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய பகுதியில் தலா 4 போ், க.மயிலை பகுதியில் 3 போ், கம்பம் பகுதியில் 8 போ், தனியாா் ஆய்வகப் பரிசோதனையில் 20 போ் உள்பட மொத்தம் 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,686 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 13,963 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

2 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்ககோணாம்பட்டியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா் என 2 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com