முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
By DIN | Published On : 04th April 2021 08:55 AM | Last Updated : 04th April 2021 08:55 AM | அ+அ அ- |

தேனி அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மனைவி செல்லம்மாள் (77). இவா், தனது மகன் பாலமுருகனின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இயங்கிக் கொண்டிருந்த மோட்டாா் பம்பினை நிறுத்துவதற்காக வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது, நிலைதடுமாறி கிணற்றில் விழுந்த செல்லம்மாள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.