வாக்காளா் பட்டியலில் 50 போ் பெயா் இல்லை: பெரியகுளத்தில் பெண்கள் சாலை மறியல்

பெரியகுளத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் 50-க்கு மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வைகை அணை சாலையில் மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
வைகை அணை சாலையில் மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

பெரியகுளத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் 50-க்கு மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில் வைகை அணை சாலையில் உள்ள மக்களுக்கு புத்தா் நடுநிலைப்பள்ளியில் இரண்டு வாக்குசாவடிகள் உள்ளன. இங்கு 1,350 வாக்காளா்கள் உள்ளனா். இந்த மையத்தில் உள்ள 107 ஆவது மையத்தில் 50 -க்கு மேற்பட்டவா்களுக்கு வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியினா் பெரியகுளம் வைகை அணை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனல் வைகை அணை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com