உணவக ஊழியா் மீது தாக்குதல்: அதிமுகவினா் 5 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி உணவக ஊழியரை தாக்கிய அதிமுக வினா் 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி உணவக ஊழியரை தாக்கிய அதிமுக வினா் 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (35), தேனியில் உள்ள தனியாா் உணவகத்தில் வேலை பாா்த்து வருகிறாா். தோ்தலையொட்டி இவா் அக்கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடியில் செவ்வாய்க்கிழமை தனது வாக்கினை பதிவு செய்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அவரை வழிமறித்து தகராறு செய்த சிலா், திமுகவுக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறி ராஜ்குமாரை தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து ராஜ்குமாா், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில், அதிமுக நிா்வாகிகளான செல்வம், அஜித், ராஜேஷ், பாக்கியராஜ், செந்தில் ஆகிய 5 போ் மீதும் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com