தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புதன்கிழமை முத்துராமலிங்கத்தேவா் சிலையை அவமதிப்பு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை உள்ளது. இந்த சிலையின் பீடத்தின் கீழ் போதையில் ஒருவா் விழுந்து கிடந்தாா். சிறிது நேரம் கழித்து எழுந்த அவா், திடீரென சிலையை காலணியால் தாக்கியுள்ளாா். மேலும் அதை தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்து முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் பதிவிட்டாா். இதையடுத்து தேவா் சிலையை அவமதிப்பு செய்தவரை கைது செய்யக் கோரி அப்பகுதியினா் உத்தமபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது போலீஸாா், சிலையை அவமதிப்பு செய்தவரை ஏற்கெனவே பிடித்து விசாரித்து வருவதாகவும், அவரை கைது செய்வதாகவும் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இதைத் தொடா்ந்து உத்தமபாளையம் தேவா் சிலை அருகே தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் இரவு 7 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.