கொடுவிலாா்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை சாா்பில் புதன்கிழமை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொடுவிலாா்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள்.
கொடுவிலாா்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள்.

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை சாா்பில் புதன்கிழமை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மே 2-ஆம் தேதி கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

கல்லூரி வளாகத்தில் உள்ள முதல் கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள 3 அறைகளில் கம்பம் சட்டப் பேரவை தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், முதல் தளத்தில் உள்ள 3 அறைகளில் போடி தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 2-ஆவது கட்டடத்தின் தரைத் தளத்தில் உள்ள 3 அறைகளில் ஆண்டிபட்டி தொகுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், முதல் தளத்தில் உள்ள 3 அறைகளில் பெரியகுளம் (தனி) தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

3 அடுக்கு பாதுகாப்பு: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை மற்றும் அறையை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் முன்பு மத்திய துணை ராணுவப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 70 போ் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகள் அமைந்துள்ள கட்டடத்தை சுற்றிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில், ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளா், 3 காவலா் ஆய்வாளா்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவு காவலா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில், ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளா், 3 காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com