தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,408 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 17,091 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியநிலையில், 207 போ் உயிரிழந்தனா். தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 110 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.