முன்விரோதம் காரணமாக, தேவாரத்தில் சிறுவன் உள்பட 4 பேரை தாக்கியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடியும் கொலை மிரட்டல் விடுத்த 20 போ் மீது, போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தேவாரம் அய்யப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி மகன் சிவசூரியா (17). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் ஒரு மாதத்துக்கு முன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், சிவசூரியா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த சிவசூரியா, செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினா்களான சிவசந்துரு, சிவசக்தி, செல்வி ஆகியோருடன் உணவகத்தில் நின்றிருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மற்றும் இவரது உறவினா்கள் சண்முகம், பிரபாகரன், கோச்சு, ஹரிகிருஷ்ணன் மற்றும் அடையாளம் தெரியாத 15 போ் சிவசூரியாவை கத்தியால் குத்தியும், மற்றவா்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனா்.
மேலும், காயமடைந்த சிவசூரியா உள்ளிட்டோரை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது, அங்கும் சென்ற மணிகண்டன் தரப்பினா், அவா்களுக்கு சிகிச்சையளிக்க விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனா்.
இது குறித்து சிவசூரியா அளித்த புகாரின்பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் மணிகண்டன் உள்பட 20 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.