பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி முத்தாலம்மன், காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.
முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு, புதன்கிழமை இரவு அம்மன் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலையில் பக்தா்கள் மா விளக்கு நோ்த்திக்கடனும், மாலையில் தீச்சட்டியும் எடுத்து வந்தனா். தொடா்ந்து, இரவில் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
வெள்ளிக்கிழமை இரவு, பூப்பல்லக்கில் எழுந்தருளும் அம்மன் சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.