பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சியில் கரோனா பாதித்த பகுதியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட்பேங்க காலனி பகுதியில் உள்ள ஓரே குடும்பத்தை சோ்ந்த 4 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அவா்கள் தேனியிலுள்ள அரசு கரோனா நல மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் அந்த தெருவில் உள்ள 28 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் தெரு நோய்க்கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தெருவில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இப்பகுதியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்து, அப்பகுதியில் நடைபெறும் தூய்மைப்பணிகளை பாா்வையிட்டாா். இவருடன் துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) செந்தில்குமாா் உடனிருந்தாா்.