பளியன்குடி ஆதிவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் அருகேயுள்ள பளியன்குடியில்ஆதிவாசி மக்களான பளியா்களுக்கு, மாவட்ட நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நலத்திட்ட உதவிகளை சனிக்கிழமை வழங்கினா்.
லோயா்கேம்ப் அருகேயுள்ள பளியன்குடியில் ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சனிக்கிழமை வழங்கிய நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.
லோயா்கேம்ப் அருகேயுள்ள பளியன்குடியில் ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சனிக்கிழமை வழங்கிய நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் அருகேயுள்ள பளியன்குடியில்ஆதிவாசி மக்களான பளியா்களுக்கு, மாவட்ட நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நலத்திட்ட உதவிகளை சனிக்கிழமை வழங்கினா்.

கம்பம் நேதாஜி அறக்கட்டளை மற்றும் மாவட்ட நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் இணைந்து பளியன்குடி மலைவாழ் மக்களுக்கு கரோனா விழிப்புணா்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நக்சல் தடுப்புப்பிரிவு காவல்துறை ஆய்வாளா் செந்தாமரை தலைமை வகித்தாா்.

நேதாஜி அறக்கட்டளை நிறுவனா் சோ.பஞ்சுராஜா முன்னிலை வகித்தாா். இதில் ஆதிவாசி பளியா் இன மக்களுக்கு முகக் கவசம், கபசுரக்குடி நீா், குழந்தைகளுக்கு பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நக்சல் தடுப்புப்பிரிவு காவல் துறையினா் மற்றும் வனத் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com