ஆண்டிபட்டியில் சரக்கு வாகனம் திருட்டு

ஆண்டிபட்டியில் சரக்கு வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டியில் சரக்கு வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் முனியாண்டி (56). இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா். இந்த வாகனம் திருடு போனது தொடா்பாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து விசாரணை செய்யாமல் போலீஸாா் காலம் தாழ்த்துவதாகக் கூறி, முனியாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com