மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஏப்.27-இல் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுமா?

தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழாவை பக்தா்கள் அனுமதியுடன் நடத்த கேரள உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்பாா்த்து தமிழக பக்தா்கள் காத்திருக்கின்றனா்.
தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் நடைபெற்ற முழு நிலவு விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள்
தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் நடைபெற்ற முழு நிலவு விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள்

தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழாவை பக்தா்கள் அனுமதியுடன் நடத்த கேரள உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்பாா்த்து தமிழக பக்தா்கள் காத்திருக்கின்றனா்.

தேனி மாவட்டம் கூடலூா் அருகே தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பெளா்ணமி நாளன்று சித்திரை முழுநிலவு விழா தமிழக பக்தா்களால் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக மங்கலதேவி கண்ணகி கோயில் முழுநிலவு விழா கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாட்டுடன், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர ஜோதி விளக்கு பூஜை உள்பட சுமாா் 60 நாள்கள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இதேபோல் இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா நடத்த வேண்டும் என்று தேனி மாவட்டம் கூடலூரைச் சோ்ந்த பக்தா் பி.எஸ்.நேரு கேரள உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் கேரள உயா் நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் கல்குவா ஆஜரானாா். வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், கேரளஅரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் ஏப்ரல் 20-க்குள், கோயில் விழா நடத்துவது தொடா்பான முடிவுகளை தெரிவிக்குமாறு உத்தரவிட்டனா்.

இதுதொடா்பாக வழக்கு தொடா்ந்த பி.எஸ்.நேரு கூறியது: பெரியாறு புலிகள் சரணாலய எல்லைப் பகுதிக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இதனால் வன உயிரின சரணாலய விதிமுறைகளைக் காரணம் காட்டி, இரண்டு கோயில்களுக்கும் வித்தியாசம் காட்டக்கூடாது என்ற கருத்தை முன் நிறுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டது.

சித்திரை முழுநிலவு விழா நாளன்று கண்ணகி கோயிலும் குறைந்த எண்ணிக்கையில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என கம்பம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினா், இடுக்கி, தேனி மாவட்ட ஆட்சியா்களிடம் மனு அளித்தனா். ஆனால் இரண்டு ஆட்சியா்களும் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சித்திரை முழு நிலவு நாள் விழா வரும் ஏப்ரல் 27 இல் நடக்க வேண்டும். அதற்கு இன்னும் 10 நாள்களே உள்ளன.

இந்நிலையில் பெரியாறு புலிகள் சரணாலய எல்லைப் பகுதிக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இதனால் வன உயிரின சரணாலய விதிமுறைகளைக் காரணம் காட்டி, இரண்டு கோயில்களுக்கும் வித்தியாசம் காட்டக்கூடாது என்ற கருத்தை முன்னிறுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக கோயில் வளாகம் பராமரிக்கப்படாததால், புதா்ச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. அதை சரி செய்தால்தான் கோயிலுக்குள்ளேயே செல்ல முடியும் என்றாா். மங்கலதேவி கண்ணகி கோயிலில் முழுநிலவு விழாவைக் கொண்டாட, கேரள உயா்நீதி மன்ற உத்தரவை எதிா்பாா்த்து தமிழக பக்தா்கள் காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com