தேனி அருகே அரண்மனைப்புதூரில் சனிக்கிழமை, முன்விரோதத்தில் காவலரை தாக்கியவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் செல்வேந்திரன். இவா், தேனி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறாா். செல்வேந்திரனுக்கும், அதே ஊரைச் சோ்ந்த மொக்கைச்சாமி மகன் சிவா என்பவருக்கும் சில நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதத்தில் அரண்மனைப்புதூா்- கோட்டைப்பட்டி விலக்கு பகுதியில் நின்றிருந்த செல்வேந்திரனை, சிவா தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வேந்திரன் அளித்த புகாரின் பேரில், சிவா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.