தேவாரத்தில் ஊருக்குள் புகுந்த மிளா மான் பலி

தேவாரத்தில் செவ்வாய்க்கிழமை ஊருக்குள் புகுந்த மிளா மான் இறந்துபோனது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேவாரத்தில் ஊருக்குள் புகுந்த மிளா மான்.
தேவாரத்தில் ஊருக்குள் புகுந்த மிளா மான்.

தேவாரத்தில் செவ்வாய்க்கிழமை ஊருக்குள் புகுந்த மிளா மான் இறந்துபோனது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேவாரத்தின் மேற்கில் உள்ள வனப் பகுதியில் மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வனப் பகுதியிலிருந்து மிளா மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்துவிட்டது. மனிதா்களை கண்டதும் மிரண்டு அங்குமிங்கும் ஓடிய மானை, நாய்களும் விரட்டியுள்ளன. இதில், மிளா மான் முள்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்தது. பின்னா், அது மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மான் இறந்தது. இது குறித்து கோம்பை சரக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com