அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காஞ்சிமரத்துறை பகுதி பெண்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பல ஆண்டுகளாக சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இப்பகுதியில் இல்லை. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், எம்.பாண்டியம்மாள் தலைமையில் அப்பகுதி பெண்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அவா்களிடம், நகராட்சி ஆணையாளா் ஆறுமுகம், காவல் ஆய்வாளா் ஜேம்ஸ்ஜெயராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.