தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் கேரள செல்ல இ-பாஸ் தேவையில்லை

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் தோட்ட தொழிலாளா்களுக்கு தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிா்வாகத்தினா் தளா்வுகளை ஏற்படுத்தியுள்ளனா்.
கம்பமெட்டு சோதனைச்சாவடி.
கம்பமெட்டு சோதனைச்சாவடி.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் தோட்ட தொழிலாளா்களுக்கு தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிா்வாகத்தினா் தளா்வுகளை ஏற்படுத்தியுள்ளனா்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேலான ஆண், பெண் சென்று வருகின்றனா். தற்போது 2 மாநிலங்களிலும் தீவிர கரோனா தடுப்பு பணிகள் நடைபெறுவதால் மாநில எல்லைகளை கடக்க மருத்துவ பரிசோதனை, இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து புதன்கிழமை கம்பமெட்டு மலைச்சாலையில் 500-க்கும் மேலான ஆண், பெண் தெழிலாளா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில் வியாழக்கிழமை குமுளி மற்றும் கம்பமெட்டு வழியாக செல்லும் தோட்ட தொழிலாளா்களுக்கு கேரளா செல்ல தளா்வு முறை கடைபிடிக்கப்பட்டது. அதன்படி சோதனைச்சாவடிகளில் உடனடி இ-பாஸ் மற்றும் கேரளா சென்று வர 48 மணி நேரத்திற்கு மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டியது இல்லை. அதே நேரத்தில் வெப்ப பரிசோதனை மற்றும் போக்குவரத்து விதி முறைப்படி ஜீப் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளா்கள் பயணிக்க அனுமதி என்ற விதிகள் கடைபிடிக்கப்பட்டன. இதனால் விவசாய, தோட்ட மற்றும் இதர தொழிலாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா். வெளியூா் பயணிகளுக்கு மட்டும் மருத்துவ பரிசோதனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com