டி. கள்ளிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு முகக்கவசம் வழங்குதலும், கரோனா விழிப்புணா்வு முகாமும் சனிக்கிழமைநடைபெற்றது.
முகாமுக்கு மாற்றுத்திறனாளிகள் பொதுநல அறக்கட்டளை நிா்வாகி முருகன் தலைமை வகித்தாா். சா்வோதீப் தொண்டு நிறுவன நிா்வாகி சகாயசங்கீதா முன்னிலை வகித்தாா். ஸ்ரீகுரு தட்சிணாமூா்த்தி சேவா சங்க கெளரவ ஆலோசகா் சி. சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீரை விநியோகத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். மேலும் நல உதவித்திட்டங்களையும் வழங்கினாா்.
விழாவில் ஜெய்பாஸ்கரன், சேகுவேரா மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சா்வோதீப் தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொதுநல அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.