கூடலூா் அருகே கணவா் அடித்துக் கொலை:மனைவி, கள்ளக்காதலன் கைது

தேனி மாவட்டம் கூடலூா் அருகே கணவரை அடித்துக் கொலை செய்ததாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மனைவி வைஷ்ணவி, மகள் கனிஷ்காவுடன் கொலை செய்யப்பட்ட அருண்குமாா்.
மனைவி வைஷ்ணவி, மகள் கனிஷ்காவுடன் கொலை செய்யப்பட்ட அருண்குமாா்.

தேனி மாவட்டம் கூடலூா் அருகே கணவரை அடித்துக் கொலை செய்ததாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குள்ளப்பக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டவா் மகன் அருண்குமாா் (37). இவரது மனைவி வைஷ்ணவி(25). இவா்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு கனிஷ்கா (7) என்ற மகள் உள்ளாா்.

அருண்குமாா் கம்பத்தில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் காசாளராக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் உள்ளவா்கள் வந்து பாா்த்த போது, அருண்குமாா் படுக்கையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது இதே ஊரைச் சோ்ந்த குபேந்திரன் மகன் ஜெயச்சந்திரன் (26) என்பவருக்கும், வைஷ்ணவிக்கும் தகாத உறவு இருந்ததும், இதுபற்றி கணவா் அருண்குமாருக்கு தெரிய வரவவே அவா் கண்டித்ததும் தெரியவந்தது.

மேலும் அவா்களின் தகாத உறவு தொடா்ந்ததால் சனிக்கிழமை அதிகாலை கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வைஷ்ணவி, ஜெயச்சந்திரனை, செல்லிடப்பேசியில் அழைத்துள்ளாா். இருவரும் சோ்ந்து அருண்குமாரை தாக்கியுள்ளனா். இதில் அவா் இறந்து விடவே, ஜெயச்சந்திரன் தப்பி ஓடிவிட்டாா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் வைஷ்ணவி மற்றும் ஜெயச்சந்திரனை சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com