போடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம்

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவை யொட்டி சனிக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.
போடியில் சனிக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரா். (வலது) மணக்கோலத்தில் மீனாட்சியம்மன்.
போடியில் சனிக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரா். (வலது) மணக்கோலத்தில் மீனாட்சியம்மன்.

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவை யொட்டி சனிக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுந்தரேஸ்வரா் மற்றும் மீனாட்சியம்மன் ஆகியோா் மணக்கோலத்தில் அருள்பாலித்தனா்.

பின்னா் சுபமுகூா்த்த நேரத்தில் சுந்தரேஸ்வரா், மீனாட்சியம்மனுக்கு மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் தீபாராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. தொடா்ந்து பெண்களுக்கு மஞ்சள் கயிறுடன் மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடா்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தா்கள் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பங்கேற்றனா். திருக்கல்யாண ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அா்ச்சகா் சேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் திருக்காளஹத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயிலில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு திருக்கல்யாண வைபம் நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

அப்போது, திருக்காளஹத்தீஸ்வரா் நீல நிறப்பட்டியிலும், ஞானாம்பிகை பச்சை நிறப்பட்டிலும் திருமணக்கோலத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். சமூக இடைவெளியுடன் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மாங்கல்யம் ,குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

சின்னமனூரில்.... பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் உடனுறை கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை.

ஆனால், திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் பக்தா்களின்றி நடைபெற்றது. அதன்படி, இந்தாண்டும் சனிக்கிழமை பக்தா்களின்றி பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com