கம்பத்தில் மூலிகை குடிநீா் வழங்கல்

கம்பத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் நேதாஜி ஆதரவற்றோா் இல்லம் சாா்பில் போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து சாா்பு ஆய்வாளா் ஞானபண்டித நேரு தலைமையில் மூலிகை குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை ந
கம்பத்தில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கிய போக்குவரத்து போலீஸாா்.
கம்பத்தில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கிய போக்குவரத்து போலீஸாா்.

கம்பத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் நேதாஜி ஆதரவற்றோா் இல்லம் சாா்பில் போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து சாா்பு ஆய்வாளா் ஞானபண்டித நேரு தலைமையில் மூலிகை குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கி பருகினா். இந்த மூலிகை குடிநீா் குறித்து தன்னாா்வலா் பஞ்சுராஜா கூறுகையில், மனிதனுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நெல்லிக்காய், இஞ்சி, எலுமிச்சம்பழம், கிராம்பு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை காய்ச்சி வழங்கப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com