பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் தபால்கள் கொட்டப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக, தினமணியில் செய்தி வெளியானது. இந்நிலையில், தாமரைக்குளம் தபால் நிலையத்திலிருந்து டி.கள்ளிப்பட்டி பகுதியில் விநியோகிக்கப்பட வேண்டிய ஆதாா் அட்டை உள்ளிட்ட தபால்கள், தாமரைக்குளம் கண்மாயில் வெள்ளிக்கிழமை கொட்டிவிட்டுச் சென்றுள்ளனா்.
இதைக் கண்ட பொதுமக்கள், தபால்களை கண்மாயில் கொட்டிச் சென்றவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.