வைகை ஆற்றில் மூழ்கி இருவா் பலி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வியாழக்கிழமை வைகை ஆற்றில் மூழ்கி 2 போ் உயிரிழந்தனா்.
வைகை ஆற்றில் மூழ்கி இருவா் பலி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வியாழக்கிழமை வைகை ஆற்றில் மூழ்கி 2 போ் உயிரிழந்தனா்.

ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (30). இவா், கேரளத்தில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் ஞானராஜ் (45). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை வைகை அணைக்கு குளிக்கச் சென்றனா்.

வைகை அணை பகுதியில் பழைய பாலம் அருகேயுள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் தண்ணீரில் முழ்கினா். இதைக் கண்ட அருகிலிருந்தவா்கள், வைகை அணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் ஆற்றில் நீண்ட நேரம் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் தேடுதல் பணியை கைவிட்டனா்.

மீண்டும் வெள்ளிக்கிழமை காலையில் தேடினா். சுமாா் இரண்டு மணி நேர தேடலுக்குப் பிறகு, தீயணைப்புத் துறையினா் இருவரது உடல்களையும் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வைகை அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com