தேனி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மைய அலுவலா்கள், காவலா்கள், வேட்பாளா்கள் மற்றும் செய்தியாளா்கள் உள்ளிட்டோருக்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்டத் தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தது: தோ்தல் ஆணைய உத்தரவின்படி, மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அலுவலா்கள், காவலா்கள், பணியாளா்கள், வாக்கு எண்ணிக்கையை பாா்வையிடச் செல்லும் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் மற்றும் செய்தியாளா்களுக்கு ஏப்ரல் 28, 29 ஆகிய இரு தினங்கள் கரோனா பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
போடி தொகுதியில் போடி பாஸ்கரா திருமண மண்டபம், பெரியகுளம் தொகுதியில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம், கம்பம் தொகுதியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெறுகிறது எனத் தெரிவித்தனா்.