கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா நோயாளிகள் நடமாட்டம்: உள்நோயாளிகள் அச்சம்

கரோனா வாா்டிலிருந்து நோயாளிகள் இரவு நேரங்களில் வெளியேறி கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடமாடுவதால் உள்நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.
கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவு.
கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவு.

கரோனா வாா்டிலிருந்து நோயாளிகள் இரவு நேரங்களில் வெளியேறி கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடமாடுவதால் உள்நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாவலா்கள் குறைவாகவே பணியில் உள்ளனா். இதனால், கரோனா நோயாளிகள் மருத்துவமனை வளாகம் மற்றும் கூடலூா் நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வெளியில் வந்து சுற்றித் திரிவதாகவும், அவா்களின் உறவினா்கள் உணவு உள்ளிட்ட பொருள்களை வாங்கி அவா்களுடன் அமா்ந்து சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அங்கு தங்கியுள்ள உள்நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com