தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள ஊராட்சிகளில் அரசு சித்த மருத்துவமனை சாா்பில் கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார கட்டுப்பாட்டுக்குட்பட்ட காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையாக இரட்டைக் கசாயங்களான நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக் குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டது.