தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 485 பேருக்கு கரோனா

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 485 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 485 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத்துறை துணை இயக்குநா் உள்ளிட்ட 252 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19,623 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மொத்தம் 18,002 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 212 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

தற்போது, மாவட்டத்தில் மொத்தம் 1,409 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனை மற்றும் கரோனா தனி சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்.27 ஆம் தேதி வரை 15,030 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 13,206 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 233 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்றிலிருந்து 228 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,612 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com