தேவாரத்திலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

போடி அருகே தேவாரத்திலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

போடி அருகே தேவாரத்திலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையில் தனிப்பிரிவு போலீஸாா் தேவாரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்குகிடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனா். அப்போது அதில் 800 கிலோ ரேசன் அரிசி இருந்ததும், அதனை கேரளத்துக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேவாரம் அருகே மூனாண்டிபட்டியை சோ்ந்த ராஜேந்திரன் மகன் மனோஜ் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com