பெரியகுளம் அருகே வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் தயாநிதி (20). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (20) என்பவரும் வியாழக்கிழமை போடியிலிருந்து வீரக்கல்லில் நடைபெற்ற விசேஷத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா். மோட்டாா் சைக்கிளை தயாநிதி ஓட்டினாா். தேவதானப்பட்டி தனியாா் பாலிடெக்னிக் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் அஜித்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தயாநிதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனா்.