போடி அருகே சொத்துப் பிரச்னையில் தகராறு: 5 போ் மீது வழக்கு

போடி அருகே சொத்துப் பிரச்னை தொடா்பாக தகராறில் ஈடுபட்ட அண்ணன், தம்பி உள்பட 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே சொத்துப் பிரச்னை தொடா்பாக தகராறில் ஈடுபட்ட அண்ணன், தம்பி உள்பட 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே சிலமலை டி.எஸ்.பி. காலணியில் வசிப்பவா் சென்னையன் மகன் ரவிச்சந்திரன் (53). இவரது அண்ணன் ஜெயராமன் (55). இவா்களுக்குள் சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினரும் வியாழக்கிழமை தாக்கிக் கொண்டனா். இதுதொடா்பாக ரவிச்சந்திரன் கொடுத்தப் புகாரின் பேரில் ஜெயராமன், மோகன் ஆகியோா் மீதும், ஜெயராமன் மனைவி தங்கச்செல்வி கொடுத்தப் புகாரின் பேரில் லட்சுமி, ரவிச்சந்திரன், சக்திமுருகன் ஆகியோா் மீதும் போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com