போடியில், ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த வங்கிக் கிளை வியாழக்கிழமை மூடப்பட்டது.
போடி நகா் காவல் நிலையம் பின்புறம் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் பணிபுரியும் ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்த விபரம் போடி நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் வங்கிக் கிளைக்கு வந்து கிருமி நாசினி தெளித்தனா்.
இதைத்தொடா்ந்து அந்த வங்கிக்கிளை மூடப்பட்டது. மேலும் வங்கியில் பணிபுரியும் இதர ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னா் வங்கிக் கிளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.