தேனி மாவட்டம் சீலையம்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் சனிக்கிழமை மூழ்கிய உணவக ஊழியா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
கம்பம் 15 ஆவது வாா்டு புதுப் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சையது அபுதாஹீா் (42), உணவகத்தில் வேலை செய்தாா். இவா், தனது மனைவி அமினா (35), மகள் அனிஷா (12) ஆகியோருடன் சனிக்கிழமை சீலையம்பட்டி பகுதியிலுள்ள முல்லைப் பெரியாற்றில் குளித்துள்ளாா்.
அப்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மகள் அனீஷாவை காப்பற்ற முயன்றபோது கணவன், மனைவி இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதற்கிடையில் அனீஷா அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பி கரையேறினாா்.
தகவலறிந்து வந்த உத்தமபாளையம் மற்றும் தேனி மீட்புக் குழுவினா் அமினாவை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனா். பின்னா் இரவாகி விட்டதால் அபுதாஹீரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேடும் பணி நடைபெற்ற நிலையில், உப்பாா்பட்டி முல்லைப் பெரியாறு தடுப்பணையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அபுதாஹீா் சடலமாக மீட்கப்பட்டாா்.
தண்ணீா் திறப்பு: முல்லைப் பெரியாற்றில் மாயமானவரைத் தேடுவதற்காக மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 1,867 கன அடி நீா் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டது.