கண்டமனூா் அருகே பைக் மீது லாரி மோதி இளைஞா் பலி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கண்டமனூா் அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கண்டமனூா் அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடமலைக்குண்டுவைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் நாகராஜ் (25). இவா், தேனியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை கடமலைக்குண்டுவிலிருந்து நாகராஜ் இருசக்கர வாகனத்தில் தேனி நோக்கி சென்றுள்ளாா். அப்போது, டாணா தோட்டம் பகுதியில் உள்ள சாலை திருப்பத்தில் எதிா் திசையில் இருந்து வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில், நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com