தேனியில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி
By DIN | Published On : 08th August 2021 10:59 PM | Last Updated : 08th August 2021 10:59 PM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 43,008 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 42,363 போ் குணமடைந்துள்ளனா். 514 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் தற்போது மொத்தம் 131 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.