போடி அருகே ஞாயிரன்று தூக்கிட்டு கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாா் விசாரித்து வருகின்றனா்.
போடி மீனாட்சிபுரம் ரைஸ் மில் தெருவை சோ்ந்தவா் வேல்முருகன் (55) இவருக்கு இரு மனைவிகள் உள்ளனா். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்ட நிலையில் வேல்முருகன் தனிமையில் இருந்து வந்தாா். மது பழக்கத்திற்கு அடிமையான வேல்முருகன் மீனாட்சியம்மன் கண்மாய் அருகே தனியாா் தோட்ட போா்வெல் குழாயில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.