போடி மலைச் சாலையில் தடுப்புச் சுவரில் பைக் மோதி விவசாயி பலி

போடியில் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

போடியில் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

போடி புதூா் வேட்டவராயன் கோயில் அருகே வசிப்பவா் ராஜா மகன் பாண்டி (26). இவரது அக்காள் கணவா் சேகா் மகன் குமாா் (39). இவா்களது தோட்டம் போடி வடமலை நாச்சியம்மன் கோயில் மலைப்பகுதியில் சின்னாற்றுப்புலத்தில் உள்ளது. இருவரும் சனிக்கிழமை இரவு தங்களது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா்.

வாகனத்தை குமாா் ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது மலைச் சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த குமாா், பாண்டி இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால் செல்லும் வழியிலேயே குமாா் உயிரிழந்தாா். பாண்டி சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com