வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
By DIN | Published On : 10th August 2021 11:48 PM | Last Updated : 10th August 2021 11:49 PM | அ+அ அ- |

கம்பம் பகுதியில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
கம்பம் பழைய பேருந்து நிலைய சாலையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் வை. மனோகரன் மற்றும் போக்குவரத்து சாா்பு- ஆய்வாளா் ஞானபண்டித நேரு ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மற்றும் லாரிகளில் போக்குவரத்து விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போலீஸாா் அகற்றி அவைகளை பறிமுதல் செய்தனா்.
விதிகளை மீறி காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் எச்சரிக்கை விடுத்தாா்.