தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை மனைவியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னமனூா் காந்திநகா் காலனியைச் சோ்ந்தவா் நடராஜன் (59). இவா் ராணுவத்தில் பணியாற்றி ஒய்வுபெற்றவா். இவருடைய மனைவி சாந்தி (54). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். அவா் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சாந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அதிகாலையில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது நடராஜன் தாக்கியதில் பலத்த காயமடைந்து சாந்தி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நடராஜனை போலீஸாா் கைது செய்தனா்.