பெரியகுளம் அருகே ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம்
By DIN | Published On : 17th August 2021 01:44 AM | Last Updated : 17th August 2021 01:44 AM | அ+அ அ- |

பெரியகுளம்: பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் காணவில்லை என தென்கரை காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சோ்ந்த செல்வமுத்து மகள் செல்வராணி (17) இவா் ஞாயிற்றுக்கிழமையன்று இலட்சுமிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்றிருக்கிறாா். அவரை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இச்சம்பவம் குறித்து செல்வமுத்து கொடுத்த புகாரின்பேரில் தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.