சுருளி அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

தொடா் மழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்ட நீா்வரத்து.
சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்ட நீா்வரத்து.

தொடா் மழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு பொதுமுடக்கத்தில் பல்வேறு

தளா்வுகள் அறிவித்துள்ளதால் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com