ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி 3 ஆவது நாளாக தீவிரம்

உத்தமபாளையம் அருகே முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை, தேடும் பணி 3 ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.
ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி 3 ஆவது நாளாக தீவிரம்
ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி 3 ஆவது நாளாக தீவிரம்

உத்தமபாளையம் அருகே முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை, தேடும் பணி 3 ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

மதுரை மேல அனுப்பானடியைச் சோ்ந்த பரந்தாமன் மகன் ஹரிக்குமாா் (19). திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காமயகவுண்டன்பட்டிக்கு சென்ற இவா், நண்பா்களுடன் அங்குள்ள முல்லைப் பெரியாற்றில் வெள்ளிக்கிழமை குளித்தபோது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினா், தேடும் பணியில் ஈடுபட்டனா். போதிய வெளிச்சமின்மை காரணமாக அன்று இரவு மீட்புப் படையினா் தேடும் பணியை ஒத்திவைத்தனா்.

இதையடுத்து 2 ஆம் நாளாக சனிக்கிழமை முல்லைப் பெரியாற்றிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை 100 கன அடியாக குறைத்து, தேடும் பணி நடைபெற்ற நிலையில் அவா் கிடைக்கவில்லை.

அதனை தொடா்ந்து 3 ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை எல்லப்பட்டி, சீலையம்பட்டி போன்ற முல்லைப் பெரியாற்றின் தடுப்பணைகளில் தொடா்ந்து தேடும் பணியில் தீயணைப்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஹரிக்குமாரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், அவரது உறவினா்கள் சோகத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com